Skip to main content

Posts

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரனை

 நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரனை அண்மையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் நாட்டில் பேசுபொருளாக மாறிய நிலையில் இந்த கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உயிர் இழந்த் நிலையிலும்,கைதிகள் மற்றும் மேலும் சில அதிகாரிகள் காயத்திற்குள்ளானர்,    எனவே இந்த சம்பவத்திற்க்கு தற்ப்போதைய நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார பதவி விலகவேண்டும் என்று கூறி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமேதாச தலைமையிலான எதிர்க்கட்சியினர்,நாடாளுமன்றில் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை சபையில் சமர்பிப்பதற்க்கான மசோதாவில் கையெழுத்திட்டனர் இதில் எதிர்க்கட்சியில் இருந்து பலர் ஆதர்வாக கையெழுத்திட்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் ஆசிக்

குடி நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்க

 குடி நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்க அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டார். அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1990களின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதிகளில் பரவி வரும் இனம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்க்கு (CKD) சுத்தமான குடிநீர் இல்லாததே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் வெறும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம் என்றும் இங்கு சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு  நிலையத்திற்கும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்...

IPL விமர்சித்த ஆர்ச்சர்

 IPL விமர்சித்த ஆர்ச்சர் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்திய அணியானது மிகவும் மோசமான முறையில் போட்டித்தொடரை இழந்துள்ளது ,மேலும் இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது,உலககிண்ணத்தை இந்திய அணியின் சமீபகால தொடர்கள் தோல்வியிலயே முடிவடைந்துள்ளது அயர்லாந்துடன் தொடரை இழந்த இந்திய அணி தற்ப்போது இங்கிலாந்துடனும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோபர் ஆர்ச்சர் iplபோட்டிகள் நடக்கும் மைதானங்கள் போல் சம தரையாக இங்கிலாந்தின் மைதானங்கள் இருக்காது என்றும் இந்தியாவில் போல் இங்கு 200மேல் அதிகமான ஓட்டங்களைப்பெற முடியாது என்றும் இங்கிலாந்து மைதாங்களில் இந்திய அணி விளையாடுவது தான் உண்மையான கிரிக்கெட் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளார்  ஜோபர் ஆச்சர் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்திய அணியானது...

இந்தியாவை வீழ்த்திய இலங்கை 19இளையேர் அணி

  இலங்கை மற்றும் இந்திய 19வயதோர்க்கான தொடரை வென்றது இலங்கை 19து வயதுடையோர் அணி முதலில் நாணய சுழற்ச்சியில் வென்ற இலங்கை 19து வயதோர் அணி முதலிப் பந்து வீசத்திர்மானித்தது. இந்தித சார்பாக சாவுஹான் மற்றும் ராஜட் பஹல் இருவரும் ஆரம்பதுடுப்பெடுத்தாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள் ஆனால் இந்த ஆரம்ப இணைப்பாட்டம் இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்களைப்பெற முன்னே இந்திய அணியின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. இருந்த போதும் இரண்டாவதாக துடுப்பெடுத்தாட வந்த வீனீத் இலங்கை அணியின் பந்துவீச்சாள்ர்களுக்கு மிகவும் சவாலாக துடுப்பெடுத்தாடினார். என்றுதான் கூறவேண்டும் 136 பந்துகளில் 131ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார். இந்திய 19வயதுடையோர் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  வீனீத் 131 ஓட்டம் 136பந்துக்கு ரிச்சந்தனி  61ஓட்டம்63 பந்துக்கு சாவின் வினோத் 26ஓட்டம் 31 பந்துகளுக்கு அர்ஜுன் ராஜ்புட் 14ஓட்டம் 26பந்துகளுக்கு     இறுதியில் 50ஓவர்கள் முடிவில் 290-8ஓட்டத்தை பெற்றனர். இலங்கை சார்பாக பந்துவீச்சில் செனவி ரத்ன 4 ஜிம்கான் மெண்டிஸ் 2 கவிஜா கமெகே 1விக்கெட்டை பெற்றனர். 291ஓட்டம் என்ற ...

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயார்!

  - ஜூலை 15ஆம்  திகதி முதல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம் சிறு போகத்திற்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும், அதற்காக தற்போது நெல் கையிருப்பிலுள்ள களஞ்சியசாலைகளை சந்தைக்கு விநியோகித்து, புதிய நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை 'சதொச' நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இம்முறை சிறுபோகத்தில் சுமார் 475,000 ஹெக்டெயர் நெல் வயல்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு காலநிலை மாற்றமும் இம்முறை நெற்செய்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், இதனால் வெற்றிகரமான நெல் அறுவடை கிடைத்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு ...

இந்திய அணியை வீழ்த்தி T20தொடரை கைப்பற்றியது அயர்லாந்து

 இந்தியாவுக்கு எதிரான T20தொடரை கைப்பற்றியது அயர்லாந்து. அயர்லாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கான  2போட்டிகள் கொண்டT20 தொடர் ஆரம்பமானது முதலாவது போட்டியானது ஜூன் 26ம் திகதி நடைபெற்றது இந்த போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்றது, இந்த தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று 28/06 நடைபெற்றது. நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியானது முதலில்  பந்துவீசத்தீர்மானித்தது. அயர்லாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக டிம்.டக்கர்,ரோஸ் அடைர் ஆகிய இருவரும் ஆடுகளம் புகுந்தனர் இந்த இணைப்பாட்டம் போதுமான ஓட்டத்தை பெறும் முன்னரே இந்திய பந்துவீச்சில் இணைப்பாட்டம் இடை நிறுத்ப்பட்டது. அயர்லாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  ஹெரி டெக்கர் 53 பெஞ்சமின் கெளிட்ஸ் 37 ரோஸ் அடைர் 16 ஜோர்ஜ்டொக்ரேல் 19ஓட்டங்களைப்பெற்றனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில்  பிரின்ஸ் யாதவ் -3 அர்சிப் சிங்-2 சிவம் தூபே-2 ஹர்சித் ரானா-1 ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இறுதியில் அயர்லாந்து அணி 20ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டை இழந்து 154ஓட்டங்களைப்பெற்றனர். 154என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இந்திய அணியின...

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது

  📚 பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது 17-06-2026 அன்று கற்பிட்டி மண்டலக்குடா பாடசாலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துணையாளர் H.M. நிப்ராஸ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், நல்லொழுக்க வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் தொடர்பாக பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமை மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். #ParentAwareness #Kalpitiya #Education #SchoolProgram #HMNipras #MandalakudaSchool 18-06-2026 செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

ஆப்கானிஸ்தான் அணிக்கு 403 வெற்றி இலக்கு,தொடரை கைப்பற்றிய இந்திய அணி

 ஆப்கானிஸ்தான் அணிக்கு 403 வெற்றி இலக்கு,தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் முதலாவது போட்டியானது மழை காரணமாக 25 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது இதில் இந்திய அணி வெற்றிபெற்றது இரண்டாவது போட்டியானது இந்தியா லக்னோவில்  பகல் இரவுப்போட்டியாக இன்று ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது இந்தியா அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்,ஆரம்பம் இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை என்றுதான் கூறவேண்டும் இந்திய அணியின் முதலாவது விக்கெட் 9ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது ஜெய்ஸ்வால் 4ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார், அதன் பின் அணித்தலைவர் சுப்மன் கில் துடுப்பெடுத்தாட வர ஆப்கான் அணி எதிர்பார்க்காத ஒரு இலக்கை தீர்மாணித்தது இந்திய அணி என்றுதான் கூறவேண்டும் ,இந்திய அணி 403ஓட்டங்களை ஆப்கான் அணிக்காக நிர்ணயித்தது இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  சுப்மன் கில்-...

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா  அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் சாதனை நிச்சயம் என்பதை நிரூபித்துள்ளார் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி லதீப் ஹயா. புத்தளம் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில்  ஈட்டி எறிதல் – 2ஆம் இடம்  குண்டு எறிதல் – 3ஆம் இடம்  தட்டெறிதல் – 4ஆம் இடம் என சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று, மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார். இந்த வெற்றியின் பின்னால் அவரது அயராத உழைப்பும், குடும்பத்தின் அர்ப்பணிப்பும், மேலும் பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர்களான ஏ.எம். பஜ்மிர், ஏ.ஆர். இஸ்பாக் அலி, எஸ். சாஜித் ஆகியோரின் வழிகாட்டலும் முக்கிய பங்காற்றுகின்றன. இன்று வெற்றிப் படிக்கட்டில் நிற்கும் ஹயா, தனது சாதனையால் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் உயரங்களை அடையத் தயாராக உள்ளார். லதீப் ஹயாவிற்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று எமது சமூகத்தின் பெருமையை உயர்த்த இறைவன் அ...

சுற்றுச்சூழல் தினத்தில் மரம் நடுகை

  உலக சுற்றுச்சூழல்( 05/06!2026)தினத்தை முன்னிட்டு நுரைச்சோலை கிராமசேவகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுரைச்சோலை கிராமசேவகர், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துணையாளர் H.M. நிப்ராஸ் மற்றும் கிராமிய மக்கள் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பொதுப்பயன் இடங்களை சுத்தம் செய்யும் சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. சமூக ஒற்றுமையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 06/06/2026