📚 பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது
17-06-2026 அன்று கற்பிட்டி மண்டலக்குடா பாடசாலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துணையாளர் H.M. நிப்ராஸ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், நல்லொழுக்க வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் தொடர்பாக பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமை மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர்.
#ParentAwareness #Kalpitiya #Education #SchoolProgram #HMNipras #MandalakudaSchool
18-06-2026
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

Comments
Post a Comment