உலக சுற்றுச்சூழல்( 05/06!2026)தினத்தை முன்னிட்டு நுரைச்சோலை கிராமசேவகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுரைச்சோலை கிராமசேவகர், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துணையாளர் H.M. நிப்ராஸ் மற்றும் கிராமிய மக்கள் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பொதுப்பயன் இடங்களை சுத்தம் செய்யும் சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. சமூக ஒற்றுமையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக்
06/06/2026


No comments:
Post a Comment