Friday, 12 June 2026

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

 


📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅

அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் சாதனை நிச்சயம் என்பதை நிரூபித்துள்ளார் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி லதீப் ஹயா.

🏆 புத்தளம் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 🥈 ஈட்டி எறிதல் – 2ஆம் இடம் 🥉 குண்டு எறிதல் – 3ஆம் இடம் 🏅 தட்டெறிதல் – 4ஆம் இடம்

என சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று, மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார்.

இந்த வெற்றியின் பின்னால் அவரது அயராத உழைப்பும், குடும்பத்தின் அர்ப்பணிப்பும், மேலும் பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர்களான ஏ.எம். பஜ்மிர், ஏ.ஆர். இஸ்பாக் அலி, எஸ். சாஜித் ஆகியோரின் வழிகாட்டலும் முக்கிய பங்காற்றுகின்றன.

இன்று வெற்றிப் படிக்கட்டில் நிற்கும் ஹயா, தனது சாதனையால் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் உயரங்களை அடையத் தயாராக உள்ளார்.

🌹 லதீப் ஹயாவிற்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று எமது சமூகத்தின் பெருமையை உயர்த்த இறைவன் அருள் புரிவானாக.

#AlankudaMMV #LatheefHaya #SportsAchievement #PuttalamZone #ProudMoment #AKMedia 🏅📸

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

13/06/2026

Friday, 5 June 2026

சுற்றுச்சூழல் தினத்தில் மரம் நடுகை

 

உலக சுற்றுச்சூழல்( 05/06!2026)தினத்தை முன்னிட்டு நுரைச்சோலை கிராமசேவகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.


சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுரைச்சோலை கிராமசேவகர், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துணையாளர் H.M. நிப்ராஸ் மற்றும் கிராமிய மக்கள் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பொதுப்பயன் இடங்களை சுத்தம் செய்யும் சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. சமூக ஒற்றுமையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக்

06/06/2026

அருவக்காடு திட்டத்துக்கு எதிரான பிரரேனை கொண்டு வந்த தூய தேசகட்சி


 


வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் அருவக்காடு திண்மக்கழிவு திட்டத்திற்கு எதிராக பிரேரணை


அருவக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிராக முதலாவது பிரேரணை வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த பிரேரணையை தூய தேசத்திற்கான கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சகோதரி சித்தி நவ்பரா அவர்கள் பிரதேச சபை தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.


அருவக்காடு திண்மக்கழிவு திட்டம் தொடர்பில் அப்பகுதி மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அச்சங்களை கருத்தில் கொண்டு தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்காரின் விஷேட வேண்டுகோளின் பேரில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பிரேரணை எதிர்வரும் சபை அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அருவக்காடு திட்டத்திற்கு எதிரான உள்ளூராட்சி மன்ற மட்டத்திலான முதல் உத்தியோகபூர்வ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


தகவல் 

தூய தேசத்துக்கான கட்சி

05/06/2026

Sunday, 31 May 2026

IPL இறுதிப்போட்டி.

Ipl இறுதிப்போட்டி இன்று



  2026ம் ஆண்டின் ipl போட்டித்தொடரின் இறுதிப்போட்டி இன்று அஹமதபாத் நரேந்திர் மோடி மைதானாத்தில் இரவு 7:30pm ஆரம்பிக்கவுள்ளது கடந்த ஏப்ரல் மாதம் ஆரபித்த இந்த தொடரில் 10அணிகள் பலப்பரீட்சை நடாத்தியது,பல பிரமிக்க கூடிய பல சாதனைகளை கிரிக்கெட் ரசிகர்களாகிய நமக்கு பார்க்ககூடியதாக இருந்தது.



அந்த வகையில் 10 அணிகளில் முதல் 4இடங்களுக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பேங்களூரு,குஜராத் டைடன்ஸ்,ராஜஸ்தான் ரோயல்ஸ்,சன்ரைஸ் ஹய்தராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தியது இந்த 4அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு ரோயல் சாலஞ்சர்ஸ் பேங்களூரு,குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளது.



இரு அணிகளும் இதுவரையிலும் ஒரு தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது, இரண்டாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் இரண்டு அணிகளும் மோதவுள்ளது யார் கிண்ணத்தை கைப்பற்ற போவது என்ற எதிர்பார்ப்பு ரசிகள் இடத்தில் எழுந்துள்ளது. சென்ற வருடம் கிண்ணத்தை கைப்பற்றிய RCB கைப்பற்றுமா? அல்லது அதற்க்கு முன் கிண்ணத்தை கைப்பற்றிய GTகைப்பற்றுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் இன்று.



 RCB அணியை பொறுத்த மட்டில் சென்ற முறை இதே மைதானாத்தில் தான் தனது முதலாவது IPLகிண்ணத்தை கைப்பற்றியது 18வருடங்களின் பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது,அதே போல் உலககிண்ண 20/20போட்டிகளின் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில் நடைபெற்றது.


செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

31-05-2026



 



Saturday, 16 May 2026

மாணவர்களுக்கான உளவளத்துனை கருத்தரங்கு

 📚 📚 மாணவர்களின் மனவளமும் எதிர்காலமும் வளமாகட்டும் 📚

நாவற்க்காடு பாடசாலையில் மாணவர்களுக்கான உளவளத்துணை மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புத்தளம் மாவட்ட உளவளத்துணையாளர் H. M. நிப்ராஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

மாணவர்களின் மனநலம், தன்னம்பிக்கை, கல்வி முன்னேற்றம் மற்றும் நல்ல சமூகப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்படுகின்றன. 


16/05/2026

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

Thursday, 14 May 2026

வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட புத்தளம்

 வெள்ளத்தில் மூழ்கியது புத்தளம்



கடந்த இரண்டு நாற்களாக நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதே போன்று நேற்று 13/05/2026 புத்தளத்தில் பெய்த அடை மழை காரணமாக புத்தளத்தின் பல பகுதிகள் ,தில்லையடி,கடையாகுளம்,புத்தளம் மத்தியபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக புத்தளத்தில் பல வீடுகால்,பாடசாலைகள்,வைத்தியசாலை,அரச நிறுவனங்கள்,கடைகள்,என்று பல இடங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது,பல குடும்பங்கள் வெள்ளம் வீட்டினுல் உற்புகுந்ததனால் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றாரர்கள்,பலரின் வீட்டுப்பொருட்களும் சேதமாகியுள்ளது இந்த வெள்ள அனர்த்தத்தினால்.




அரச தரப்பு மற்றும் தனியார் நிறுவனங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கான உதவிககளைச்செய்து வருகின்றனர்.




செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்


சமூக விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம்

 #சமூக_விழிப்புணர்வு #ஆலோசனைக்கூட்டம்



12/05/2026 அன்று முதலப்பாளி மகளிர் சங்க உறுப்பினர்களுக்காக சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளை எவ்வாறு இனங்காணுவது மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதையொட்டி பயனுள்ள ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கற்பிட்டி பிரதேச உளவளத்துறைக்கு பொறுப்பான உத்தியோகத்தர் திரு. H.M.நிப்ராஸ் அவர்கள் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கினார்.

சமூக முன்னேற்றத்திற்கும் பெண்களின் செயற்பாட்டு பங்களிப்பிற்கும் இத்தகைய நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

14/05/2026


ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...