Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

மலையகம் சென்றார் ஜனாதிபதி

 மலையகம் சென்றார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இன்றைய தினம் 11-02-2026ம் திகதி மலையகத்துக்கு சென்றார் போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு மக்கள் பேரணி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று போதை ஒழிப்போம் என்ற தலைப்பில் இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு ஜனாதிபதி யாரும் எதிர்பார்க்க விதமாக மலையகத்கில் தேயிலை பறித்துக்கொண்டு இருந்த மக்களோடும் தீடீர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.    இந்த நிகழ்வு மக்களிடயே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது சிலர் கூறியது இதற்க்கு முன்னிருந்த ஜனாதிபதிகள் யாரும் எங்களோடு வந்து பேசவில்லை என்று கூறி மகிழ்ச்சியடைந்தனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன முஹம்மட் ஆசிக் 11/02/2026

விடைபெறுகிறார் ஜூலி ஜியூன் சங்

 தனது இராஜதந்திர பதவிக் காலச் சேவை நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதுவர் ஜூலி ஜியூன் சங் (Julie Chung) இன்று16/01/2026 காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார். இலங்கைக்கு கடந்த காலங்களில் அவர் பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார். அவரால் இந்நாட்டில் தூதுராக சேவையாற்றிய காலத்தில் பெற்றுத் தந்த சிறந்த சேவையை ஒருபோதும் மறந்திட முடியாது என்றுன் எதிர்க்கட்ச்சித்தலைவர் தெரிவித்தார். தகவல்:-சஜித் பிரமேதாச (முகனூல்) 17/01/2026

ஜனாதிபதி யாழ் வீதியில்

இலங்கை நாட்டின் ஜனாதிபதி 16/01/2025 இன்று யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேலையில் நடைப்பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.     இது ஒரு பெரிய விடயாமா என்றால் இல்லை .வெளி நாடுகளில் ஆனால் ஆசியாவைபொருத்த மட்டில் குறிப்பாக இலங்கை நாட்டில் இது பெரிய விடயமே     ஏன் என்றால் இதற்க்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் ஒரு நாளில் வந்து சென்று விடுவார்கள் ஆனால் தற்ப்போதைய ஜனாதிபதி அவர்கள் அதற்க்கு மாற்றமாக உள்ளார்.    நேற்று(15/01/2026) மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதே தினத்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கு தங்கி இன்று காலைப்பொழுதில் யாழ்ப்பாண வீதிகளில் நடைப்பயணம் செய்தது மக்களிடையே பெறும் வரவேற்ப்பைப்பெற்றுள்ளது.    அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் குறிப்பாக வடக்கு மக்களுக்குமிடையிலான ஒரு இணக்கம் காணப்படுகின்றது என்றே கூறமுடியும்.   செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக

ஜனாதிபதி தலைமையில் 5Mவேலைத்திட்டம் ஆரம்பம்

 இன்று (09/01/2026) ராஜாங்கனை, விகாரைக்கு அருகில் நடைபெற்ற அனுராதபுர மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மஹவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லேவ, மிஹிந்தலை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ் உள்ள பிரதான வேலைத்திட்டமாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பிறகு, இருந்ததை விட சிறந்த நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டினார். மேலும், மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், போதுமான வருமானம், பிளைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்ல வீடு, அத்துடன் மன அமைதியும் அவசியம் என்று சுட்டிக்காட்டியதுடன், அரசாங்கம் இதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் பெற்றோருக்கு சுமையாக இல்லாத, பிள்ளைகளுக்கு...

6ஆம் தர பாடப்புத்தக உள்ளடக்க விவகாரம் தற்செயலானது அல்ல. திட்டமிடப்பட்டது - இம்ரான் எம்.பி

6ஆம் தர பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்லது. அது திட்டமிடப்பட்டு சேர்க்கப்பட்டது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஒரு பாடப்புத்தகம் பலரது தொடர்புகளைத் தாண்டியே வெளிவருகின்றது. எழுத்தாளர்குழு, தட்டச்சு செய்வோர், பக்க வடிவமைப்பாளர்கள், புரூவ் பார்வையாளர், இணைப்பளார்கள், பணிப்பாளர், மேற்பார்வையாளர் எனப்பலரது தொடர்புகளைத் தாண்டித் தான் ஒரு பாடப் புத்தகம் வெளிவருகின்றது. இந்த விடயங்களை புத்தகத்தின் ஆரம்ப பக்கங்களில் நாம் காணலாம். இந்நிலையில் ஒருபுத்தகத்தில் எந்தவொரு விடயத்தையும் யாரும் தனிப்பட்ட ரீதியில் இடையில் செருக முடியாது என்பது தெளிவாகின்றது. இந்த வகையில் நோக்கும் போது 6 ஆம் தரப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தொடர்பான விவகாரம் தற்செயலானது அல்ல. அது திட்டமிட்ட அடிப்படையில் சேர்க்கப்பட்டதே என்பது தெளிவாகின்றது. நமது நாட்டுக்கென்று சிறந்த கலாசார பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்தக் கலாசாரங்களை சிதைப்பதற்கு இந்த அரசாங்கம...

காணி விடுவிக்க உத்தரவு

 வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.  கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஶ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  கந்தசாமி பிரபு,  ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி  (பா.உ) கலந்துகொண்டார். இதன்போது, சுற்றாடல்  அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப...

வீதி மின்விளக்கு திருத்தம்.

 கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் தலைமையில் வீதி மின் விளக்கு பொறுத்தும் நிகழ்வு கல்பிட்டியின் பிரதேச உறுப்பினர் AR.முஸம்மில் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் கற்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்துக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது இதில் கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் Asm றிகாஸ் அவர்களும் கலந்துகொண்டார். தகவல்:-Ar.முஸம்மில்( பி.ச.உ.கல்பிட்டி)                   

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல்

  🔷 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடியது 🔸 பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டடத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா பெண் பாராளுமன்ற ஒன்றியத்துடன் கலந்துரையாடினார் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்துக் கலந்துரையாடும் கூட்டமொன்று ஒன்றியத்தின் தலைவர் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் 20.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பெண்களைத் தெரிவுசெய்வது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களைச் சந்திப்பது, பத்தாவது பாராளுமன்றத்தில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் உருவாக்குவது, பாராளுமன்றத்திற்குள் பகல்நேர பராமரிப்பு நிலையமொன...