ஆப்கானிஸ்தான் அணிக்கு 403 வெற்றி இலக்கு,தொடரை கைப்பற்றிய இந்திய அணி
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.
இதில் முதலாவது போட்டியானது மழை காரணமாக 25 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது இதில் இந்திய அணி வெற்றிபெற்றது இரண்டாவது போட்டியானது இந்தியா லக்னோவில் பகல் இரவுப்போட்டியாக இன்று ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது
இந்தியா அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்,ஆரம்பம் இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை என்றுதான் கூறவேண்டும் இந்திய அணியின் முதலாவது விக்கெட் 9ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது ஜெய்ஸ்வால் 4ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார், அதன் பின் அணித்தலைவர் சுப்மன் கில் துடுப்பெடுத்தாட வர ஆப்கான் அணி எதிர்பார்க்காத ஒரு இலக்கை தீர்மாணித்தது இந்திய அணி என்றுதான் கூறவேண்டும் ,இந்திய அணி 403ஓட்டங்களை ஆப்கான் அணிக்காக நிர்ணயித்தது இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
சுப்மன் கில்- 154 ஓட்டம் 110பந்துக்கு
இஷான் கிஷன் 125ஓட்டம் 79பந்துக்கு
ரோஹித் சர்மா 48ஓட்டம் 39பந்துக்கு
ஸ்ரேய் அய்யர் -26ஒட்டம் 24பந்துக்கு
என்று பெர10விக்கெட் இழப்புக்கு 402ஓட்டத்தைபெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் சார்பாக பந்துவீச்சில்
கரோட்டி 76-4
ரசித் கான் 48-3
சலீம் சாபி 75-1
ஹசன்பர் 69-1 என்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.
403 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடச்சென்ற ஆப்கான் அணியானது ஆரம்பம் சரியாக அமைந்த போதும் நிலையான துடுப்பாட்ட திறன் இல்லாமையினால் அடுக்கடுக்காக் விக்கெட்டுக்களை பறிகொடுக்க ஆரம்பித்தது என்று தான் கூறவேண்டும்,ஆப்கான் அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்ரஹ்மத் சா 89பந்துகளில் 79ஓட்டம்
குர்பார் 39பந்துகளில் 41 ஓட்டம்
சாதிகுல்லா ஆடல் 50 பந்துகளில்42 ஓட்டம்
இப்ராஹிம் சட்ரான் 31பந்துகளில் 21ஒட்டம் என்று பெற்றனர். இறுதியில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 232ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணி சார்பாக பந்துவீச்சில்
குர்னூர் பிரார் -3பிரின்ஸ் யாடவ்-2
அர்சிப் சிங்-3
வாவிங்டன் சுந்தர்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.இறுதியில் 3போட்டிகள் கொண்ட தொடரில் 2போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
17-6-26





Comments
Post a Comment