Skip to main content

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயார்!

 

- ஜூலை 15ஆம்  திகதி முதல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்



சிறு போகத்திற்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும், அதற்காக தற்போது நெல் கையிருப்பிலுள்ள களஞ்சியசாலைகளை சந்தைக்கு விநியோகித்து, புதிய நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை 'சதொச' நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.


இம்முறை சிறுபோகத்தில் சுமார் 475,000 ஹெக்டெயர் நெல் வயல்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு காலநிலை மாற்றமும் இம்முறை நெற்செய்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், இதனால் வெற்றிகரமான நெல் அறுவடை கிடைத்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்குக் கடனாக வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் மேலும் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.


நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், அதற்காக மாவட்ட செயலாளர்களின் ஒத்துழைப்புடன் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க,2024ஆம் ஆண்டில் நெல் ஆலை உரிமையாளர்களை அழைத்து நெல் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று கோர நேரிட்டது. தற்போது நெல் ஆலை உரிமையாளர்களை அழைத்து நெல் விலையைக் குறைக்க வேண்டாம் என்றே கூற வேண்டியுள்ளது. கடந்த ஒன்றரை வருட காலத்தில் அதிக நெல் அறுவடையைப் பெற முடிந்தமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 


அத்தோடு, 2024ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டியிருந்ததாகவும், எனினும் விவசாயிகள் அதற்குச் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்றும், ஆனால் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யும் வரை விவசாயிகள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு  சுட்டிக்காட்டப்பட்டது.


2025ஆம் ஆண்டின் சிறு மற்றும் பெரும் போகங்களில்  16 பில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளில் சுமார் 120,000 மெட்ரிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 60,000 மெட்ரிக் தொன்னை சந்தைக்கு விநியோகிப்பதற்காக  விலைமனுக் கோரப்பட்டுள்ளதுடன், மேலும் 20,000 மெட்ரிக் தொன் நெல்லை சதொச நிறுவனத்திற்கு விநியோகிப்பதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் இதன் போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, தேவைக்கேற்ப கூட்டுறவுச் சங்கங்கள், கமத்தொழில் சேவைத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளையும், தனியார் துறையின் களஞ்சியசாலைகளையும் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன் போது  கலந்துரையாடப்பட்டது.


ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,கமத்தொழில், கால்நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் என். எஸ். வனசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ. விமலேந்திரராஜா, நிதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. எம். கே. ஹெட்டியாரச்சி,நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த,கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரத்னதுங்க, சதொச தலைவர் கோசல வில்பாவ ஆகியோர் இக்கலந்துரையாடலில்  பங்கேற்றனர். அத்துடன், நெல் பயிரிடப்படும் மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இணையவழினூடாக  இதில் இணைந்திருந்தனர்.

09/07/2026



Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...