தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி புத்தளம்,கற்பிட்டி,முதலைப்பாளியில் இயங்கி வரும் தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் இம்மாதம் (ஜூலை)28,29,30ஆகிய தினங்களில் மதுரசா மாணவர்களுக்கான மாபெரும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது, இந்த மதுரஸாவில் சுமார் 160மாணவர்கள் கல்விகற்கின்றனர்,இவர்களின் விளையாட்டுத்திறமைகளையும் ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த இல்ல விளையாட்டுப்போட்டியை இந்த மதுரஸாவில் அதிபர் அஷ்ஷேக் ஜெமில்கான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 160மாணவர்களையும்,மதுரஸாவில் பணிபுரியும் உலமாக்கள் 16பேரையும் ஒன்றினைத்து நான்கு இல்லங்களாக பிரிக்கப்பட்டு வெகுவிமர்சையான முறையில் இந்த விளையாட்டுப்போட்டி. நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வுகளை முன்று நாட்கள் நடாத்த திட்டமிட்டு அதில் ஒவ்வொரு நாட்களில் ஒவ்வொரு விளையாட்டு தொகுதிகளாக நடாத்தவும் விளையாட்டுக்குழு தீர்மானித்தது.அந்தவகையில் முதலாவது (28)நாள் நிகழ்வாக கிரிக்கெட் ,கரப்பந்துப்போட்டிகளை 4இல்லங்களுக்கிடையில் நடாத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது நாளன்று(29) மாணவ...