Skip to main content

தொடரை கைப்பற்றியது சிம்பாபே

 


பங்களாதேஷ் மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி இன்று 10/07/2026ம் நடைபெற்றது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது, முதலில் சிம்பாவே சார்பாக ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களாக பிரைன் பென்னட் மற்றும் பென் கரண்ட் ஆகியேர் மைதானம் நுழைந்தனர்.


இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியை தங்களது கட்டுப்பாட்டில்வைக்கதிட்டமிட்டிருந்தனர் என்று தான் கூறவேண்டும்  அணி12 ஓட்டம் பெற்றிருந்த வேலை சிம்பாவேயின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது


சிம்பாவே சார்பாக துடுப்பெடுத்தாட்ட வரிசை பின்வருமாறு அமைந்திருந்தது

மந்வேரா 75 (74b)

இன்னசெண்ட் கையா 25(64b)

பிரட் எவன்ஸ் 50(43b)

சிக்கந்தர் ராசா 11(25b)


இறுதியில் 48ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 199ஓட்டங்களைப்பெற்றது சிம்பாவே அணி பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில்

சைபுல் இஸ்லாம்  4

தன்விர் இஸ்லாம் 2

தஸ்கின்                      2

சைபுட்டின்.                1 இந்த வகையில் வீக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்.



200ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்று துடுப்பாடச்சென்றது பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் இல்லை சிம்பாவேவுடன் தொடரை 3-0என்று இழக்க நேரிடும் என்ற நிலையில் பங்களாதேஷ் அணி காணப்பட்டது 3போட்டிகளை கொண்ட இந்த சுற்றுத்தொடரில் பங்களாதேஷ் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


200என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தன்சீன் ஹசன் தமீம் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் வந்தனர் இந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற வந்த வங்கதேசத்தின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது சிம்பாவே அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இவர்கள் இருவரின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தினரும் வகையில் ஆரம்பம் அமைந்தது என்று கூறலாம். வங்கதேசத்தின் முதலாவது விக்கெட் அணி 150ஓட்டம் பெற்ற வேலையில் வீழ்த்தப்பட்டது.


 பங்களாதேஷ் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்


தன்சீல் ஹசன் தமீம் 94 (101b)

சவுமியா சர்கார்           69(82b)

சான் டோ                          18(28b) என்று பெற்றனர் இந்த போட்டியில் பங்களாதேஷ் 3விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது சிம்பாவே சார்பாக பந்து வீச்சில்


எர்ன்செட் மஸ்கோ 2

தனகா சிவங்கே 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-1என்ற கணக்கில் சிம்பாவே வெற்றி பெற்றது


செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் முஹம்மட் ஆசிக்


Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...