Skip to main content

இங்கிலாந்து v இந்தியா 1st ODI

 



இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித்தொடர்  14/7/2026 இங்கிலாந்தின் பிரிங்கம்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.


இங்கிலாந்துடன் இருபதுக்கு இருபது தொடரை இழந்த இந்தியாவுக்கு இந்த ஒரு நாள் தொடர் மிகவும் முக்கியமானதாகவும் இந்திய இரசிகள் இந்தியா இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா என்ற கேள்விக்குறியோடு இந்த ஒரு நாள் தொடரை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.நாணய சுழற்ச்சியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி முதலாவது துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


இங்கிலாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பெடுத்தாட பென் டக்கெட்,மற்றும். ஜெகப் பெதல் ஆகியோர் கழம் இறங்க இந்த இணைப்பாட்டம் இங்கிலாந்துக்கு  சிறந்த ஆரம்பத்தை கொடுக்கவில்லை இந்தியாவின் பந்துவீச்சு இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக அமைந்தது

இங்கிலாந்து ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 80ஓட்டங்களுக்கு 5விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆனால் அனுபவீரர் ஜோ ரூட்டின் நிதானம் விக்கெட்டை விட்டுக்கொடுக்காத ஆட்டம் இங்கிலாந்தை மோசமான ஓட்ட வீதத்தில்  இருந்து காப்பாற்றியது

இங்கிலாந்துசார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

ஜோ ரூட் 76(76b)

லியாம் டவ்சன் 68(83b)

பென் டக்கட் 43 (45b)

வில் ஜக்20(19b) என்று ஓட்டத்தை பெற இங்கிலாந்து இறுதியாக 47.5ஒவர்கள் நிறைவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 258ஓட்டங்களைப்பெற்றது,

இந்தியா சார்பாக பந்துவீச்சில்

அக்சர் படேல்-4

பிரதீப் கிருஷ்ணா-2

குர்னூர் பிரார்-1

பும்ரா-1 என கைப்பற்றினார்கள்.

259எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாட இந்திய அணி ஆயத்தமானது வெகு நாட்களுக்கு பின் கோஹ்லி,மற்றும் ரோஹித் சர்மாவை கான ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர், ஆனால் அது அவர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் கோஹ்லி பெரிதாக ஓட்டம் பெறும் முன்னரே ஆட்டமிழந்தனர். இந்தியாவின் முதலாவது விக்கெட் அணி 43ஓட்டம் பெற்ற போது வீழ்த்தப்பட்டது பெரிதும் எதிர்பார்த்த ரோஹித் சர்மா 11ஓட்டத்துடனும் விராட் கோஹ்லி 5ஓட்டத்துடன் திரும்பினார்கள் 48ஓட்டங்களுக்கு 2விக்கெட்டை இழந்தது இந்திய அணி ஆனால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார் அணித்தலை சுப்மன் கில்

இந்தியா சார்பில் துடுப்பெடுத்தாட்டத்தில் 

 சுப்மன் கில் 80(75)

வாசிங்டன் சுந்தர் 52(63)

சிரேஷ் அய்யர் 35(53)

ரோஹித் சர்மா 11(21)என்ற அடிப்படையில் ஓட்டத்தை பெற்றனர். 

இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் 

ஜோபர் ஆச்சர்-1

சாம் கரண்-1

ஜோஸ் டோங்கோ-1

விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணியானது 45.2ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டை இழந்து 262ஓட்டங்களைப்பெற்று 7விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தெரிவானார்.3போட்டிகள் கொண்ட தொடரில் 1-0என்று இந்தியா முன்னிலையில் உள்ளது

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்


    


Comments

Post a Comment

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...