இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித்தொடர் 14/7/2026 இங்கிலாந்தின் பிரிங்கம்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இங்கிலாந்துடன் இருபதுக்கு இருபது தொடரை இழந்த இந்தியாவுக்கு இந்த ஒரு நாள் தொடர் மிகவும் முக்கியமானதாகவும் இந்திய இரசிகள் இந்தியா இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா என்ற கேள்விக்குறியோடு இந்த ஒரு நாள் தொடரை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.நாணய சுழற்ச்சியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி முதலாவது துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இங்கிலாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பெடுத்தாட பென் டக்கெட்,மற்றும். ஜெகப் பெதல் ஆகியோர் கழம் இறங்க இந்த இணைப்பாட்டம் இங்கிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுக்கவில்லை இந்தியாவின் பந்துவீச்சு இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக அமைந்தது
இங்கிலாந்து ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 80ஓட்டங்களுக்கு 5விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆனால் அனுபவீரர் ஜோ ரூட்டின் நிதானம் விக்கெட்டை விட்டுக்கொடுக்காத ஆட்டம் இங்கிலாந்தை மோசமான ஓட்ட வீதத்தில் இருந்து காப்பாற்றியது
இங்கிலாந்துசார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
ஜோ ரூட் 76(76b)
லியாம் டவ்சன் 68(83b)
பென் டக்கட் 43 (45b)
வில் ஜக்20(19b) என்று ஓட்டத்தை பெற இங்கிலாந்து இறுதியாக 47.5ஒவர்கள் நிறைவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 258ஓட்டங்களைப்பெற்றது,
இந்தியா சார்பாக பந்துவீச்சில்
அக்சர் படேல்-4
பிரதீப் கிருஷ்ணா-2
குர்னூர் பிரார்-1
பும்ரா-1 என கைப்பற்றினார்கள்.
259எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாட இந்திய அணி ஆயத்தமானது வெகு நாட்களுக்கு பின் கோஹ்லி,மற்றும் ரோஹித் சர்மாவை கான ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர், ஆனால் அது அவர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் கோஹ்லி பெரிதாக ஓட்டம் பெறும் முன்னரே ஆட்டமிழந்தனர். இந்தியாவின் முதலாவது விக்கெட் அணி 43ஓட்டம் பெற்ற போது வீழ்த்தப்பட்டது பெரிதும் எதிர்பார்த்த ரோஹித் சர்மா 11ஓட்டத்துடனும் விராட் கோஹ்லி 5ஓட்டத்துடன் திரும்பினார்கள் 48ஓட்டங்களுக்கு 2விக்கெட்டை இழந்தது இந்திய அணி ஆனால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார் அணித்தலை சுப்மன் கில்
இந்தியா சார்பில் துடுப்பெடுத்தாட்டத்தில்
சுப்மன் கில் 80(75)
வாசிங்டன் சுந்தர் 52(63)
சிரேஷ் அய்யர் 35(53)
ரோஹித் சர்மா 11(21)என்ற அடிப்படையில் ஓட்டத்தை பெற்றனர்.
இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்
ஜோபர் ஆச்சர்-1
சாம் கரண்-1
ஜோஸ் டோங்கோ-1
விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணியானது 45.2ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டை இழந்து 262ஓட்டங்களைப்பெற்று 7விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தெரிவானார்.3போட்டிகள் கொண்ட தொடரில் 1-0என்று இந்தியா முன்னிலையில் உள்ளது
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
good news
ReplyDelete