இந்தியா அணி சிறந்தகிரிக்கெட் அணியாக இருந்தாலும் அது விளையாடும் போட்டிகளில் தோல்வியடைவேண்டும் என்று பார்க்கின்றவன் நான் காரணம் இலங்கை கிரிக்கெட் ரசிகன் நான்
இந்தியாவில் பல திறமையான வீரர்கள் வந்து சென்றாலும் சஞ்சு சம்சுனின் விளையாட்டில் ஒர் பிடிப்பு
இந்திய அணியில் பல போட்டிகளில் இவருக்கான வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அதில் சஞ்சு பெரிதாக விளையாடியதில்லை இலங்கை அணியின் ஒரு வீரர் நன்றாக விளையாடவில்லை என்றால் வரும் கவலை சஞ்சு சம்சன் விளையாட பொழுதில் எனக்கு வந்ததுண்டு
நல்ல வீரர் ஆனால் சர்வதேசபோட்டிகளில் இவர் பிரகாசிப்பது குறைவு என்றகவலையே இந்திய வீரர்கள் துடுப்பெடுத்தாட்டத்தில் 50/100/150ஓட்டங்களைப்பெற்றால் மைதானத்தை இரண்டாக்கி விடுவார்கள் ஆனால் அதற்க்கு மாற்றமான ஒரு வீரர் எப்பொழுதும் அமைதி,அழகான புன்னைகை, அழகான துடுப்பெடுத்தாட்டம் என்பன சஞ்சு சம்சுனின் மீதும் அவரின் கிரிக்கெட்டின் மீதும் ஒரு ஈர்ப்பு.
இந்த தொடரில் சம்சும் ஆரம்பத்தில் பெரிதாக விளையாடவில்லை மீண்டும் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடும் பொழுது இந்த போட்டியில் சம்சுன் 100அடிக்கமாட்டானா இவரால் இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறாத எண்ணம் காரணம் இந்தியாவைப்பொறுத்தவரையில் சில போட்டிகளிக் சரியாக விளையாட விட்டால் அணியில் வாய்ப்பு கிடைக்காது நல்ல வீரர் சர்வதேசமட்டத்தில் பிரகாசிக்காமல் போய்விடுவானே என்ற பயமே ஆனால் அதனை மாற்றியமைத்தார் சஞ்சு சம்சுன் இந்த உலககிண்ணத்தை இந்தியா கைப்பற்றியதுக்கு முழுக்காரணமும் இந்த சஞ்சு சம்சுன் என்ற தனி ஒருவனே
Iplஇலங்கை வீரர்கள் இருக்கும் அணி வெற்றிபெற வேண்டும் என்று iplபார்க்கிறவன் ஆனால் சஞ்சு சம்சுன் அணித்தலைவராக இருந்தால் அந்த அணி வெற்றிபெறவேண்டும் என்று பார்த்ததும் உண்டு
திறமையான வீரன் எங்கிருந்தாலும் அவனின் திறமை வெளிக்கொண்டுவரப்படவேண்டும் சஞ்சு சம்சுன் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.
Thajudeen Muhammed Aasik.

No comments:
Post a Comment