எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
அமேரிக்கா,இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போர் காரணமா உலக சந்தையில் மசகு எண்னையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
எனவே அதன் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு என்றும் நடைபெறுகின்றது
அந்த வகையில் இலங்கையிலும் சடுதியாக எரிபொருளின் விலைகள் இன்று 09/03/2026 இரவு 12:00மணியின் பின்னர் அதிகரிக்கப்படும் என்று இலங்கையின் எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
அதற்கேற்ப இலங்கையில்
- 92 வகை டீசல் 22 ரூபாய் அதிகரித்து 303 ரூபாயாகவும்
- 95வகை சுப்பர் டீசல் 24ரூபாய் அதிகரித்து 353 ரூபாயாகவும்
- பெற்றோல் 92 வகை 24ரூபாய் அதிகரித்து 317 ரூபாயாகவும்
- பெற்றோல் 95 வகை 25ரூபாய் அதிகரித்து 365 ரூபாயாகவும்
- மண்ணென்னய் 13ரூபாய் அதிகரித்து 195 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
செய்தித்தொகுப்பு :- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

No comments:
Post a Comment