இலங்கைக்கு எப்போதும் உதவத்தயார் ஈரான்
தற்ப்போதை அமேரிக்கா,இஸ்ரேல் -ஈரான் நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் போரின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம், அமைதி,என்பன பெரும் பாதிப்புக்கு மத்தியில் செல்கின்றது.
அந்த வகையில் பல நாடுகளில் எரிபொருள்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பல பாதிப்புக்களை ஒவ்வொரு நாடும் சந்தித்தி வருகின்றது எரிபொருள் உற்பத்தி செய்து வினியோகிக்கும் நாடுகள் கூட எரிபொருள் விலையை தங்களது நாட்டில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்த பிரச்சினை இலங்கையை விட்டு வைக்கவில்லை இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மீண்டு வந்த இலங்கை மீண்டும் எரிபொருளின் பாரிய விலை அதிகரிப்பினால் நாட்டின் அரச வேலைகள்,பொதுப்போக்கு வரத்து தொழில் என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று இலங்கையில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்த ஈரானிய தூதுவர் இலங்கை நாட்டுக்கு நாம் எப்போதும் எந்த உதவியையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கு தேவையான எண்ணெய் மற்றும் அத்தியவசிய பொருட்களையும் எப்போது வேண்டுமானாலும் வழங்தயாராக இருப்பதாக ஈரானிய தூதுவர் கூறினார்.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
23/03/2026

No comments:
Post a Comment