📚 📚 மாணவர்களின் மனவளமும் எதிர்காலமும் வளமாகட்டும் 📚
நாவற்க்காடு பாடசாலையில் மாணவர்களுக்கான உளவளத்துணை மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புத்தளம் மாவட்ட உளவளத்துணையாளர் H. M. நிப்ராஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
மாணவர்களின் மனநலம், தன்னம்பிக்கை, கல்வி முன்னேற்றம் மற்றும் நல்ல சமூகப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்படுகின்றன.
16/05/2026
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

No comments:
Post a Comment