தவேகா பிரச்சாரக்கூட்டத்தில் பாட்டில் வீச்சு
தமிழகத்தின் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று முதல் தங்களது வேட்புமனுக்களை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சில கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ஆரம்பித்துவிட்டனர் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் ஆதவ் அர்ஜூனாவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் வில்லிவாகத்தில் கட்சித்தொண்டர்களின் மத்தியில் நடைபெற்றுக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் அங்கு மதுமான பாட்டில்கள் உடைத்து மக்களுக்கு இடையில் வீசப்பட்டது.இதனால் கூட்டத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது .
இதற்க்கு காரணம் திமுகா தான் என்றும் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூட்டத்தின் நடுவே பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்தார் ஆதவ் அர்ஜூனா.தமிழகத்தின் தேர்தல் நடிகர் விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து 234தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
31/03/2026

Comments
Post a Comment