அல்-மினா பாலர் பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வு
புத்தளம்,ஆலங்குடா,அலி ஜின்னா கிராமத்தில் இயங்கி வரும் அல் மினா பாலர்பாடசாலையில் இன்று 04/02/2026ம் திகதி 78து சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது தேசிய கீதம் பாடப்பட்டு,தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது,அத்தோடு இந் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்கள் தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் பாதையோரமாக நடைபவனியும் சென்றனர்.
இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்களாக வரக்கூடியவர் எனவே இந்த வருடத்தில் கல்வியை நோக்கி வந்திருந்த இந்த சிறுவர்களுக்கு நாட்டின் சுதந்திர தினம் என்னவென்றும்,அது கடந்து வந்த பாதையையும் ஆசிரியரினால் கூறப்பட்டது.
இந்த நிகழ்வின் மூலம் சிறுவர்களிடையே நாட்டுப்பற்று, தேசிய அடையாளம் மற்றும் சமூக ஒற்றுமை போன்ற மதிப்பீடுகளை வளர்க்கும் நோக்கம் நிறைவேறியது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது
புகைப்பட உதவி:-அஸ்ஸாலி
செய்தித்தொகுப்பு:-தாஜூன் ஆசிக்
04/02/2026



No comments:
Post a Comment