மன்னார்-புத்தளம் பாதை (இளவங்குளம் ஊடான) பாதையை மீண்டும் திறக்ககோரி இன்று 23/01/2026 மன்னார் மற்றும் புத்தளத்தின் பல பகுதிகளில் ஜனாதிபதிக்கு இந்த பாதையின் முக்கியத்துவத்கை தெரியப்படுத்தும் நோக்கிலும் ,இந்த பாதையை திறப்பதையும்,இந்த பாதையினூடாக பயணிக்க மக்கள் எவ்வளவு ஆர்வத்துடனும் இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவிக்க மக்களிடம் கையொப்பம் கேட்க்கப்பட்டது அதிகளவிலான மக்கள் இந்த கையொப்பம் வைக்கும் நிகழ்வில் ஆர்வத்துடன் பலரும் தங்களது ஆதரவை கையொப்பமிட்டு தெரிவித்திருந்தனர் என்பதை காணக்கிடைத்தது.
மேலும் இந்த பாதையை திறப்பதனால் மக்களுக்கான பயணச்செலவு,பயணச்சுமை என்பன குறையும் அத்தோடு இது புதிதாக இந்த மக்கள் இந்த பாதையை கேட்கவில்லை யுத்ததுக்கு முன் மன்னார் புத்தள மக்களினால் உபயோகித்த பாதை யுத்த முடிவின் பின்னரும் புத்தள,மன்னார் மக்களினால் உபயோகிக்கப்பட்ட பாதையையே இந்த மக்கள் மீண்டும் மக்களின் பாவனைக்காக கேட்க்கின்றனர்.
எனவே இந்த மக்களின் நீண்டகால ஒரு எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த மன்னார்,புத்தளம் பாதையை இந்த நாட்டின் தற்ப்போதைய ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றித்தருவாரா? என்ற ஒரு கேள்வியோடு இந்த பாதையை திறப்பதுக்கான பல முயற்ச்சிகளை இதன் ஏற்பாட்டாளகள் செய்துகொண்டே இருக்கின்றனர்.இந்த கையொப்ப நிகழ்வும் இந்த ஏற்பாட்டாளர்களின் முயற்ச்சிகளின் ஒன்றாகும் பார்ப்போம் ஜனாதிபதி இதற்க்கு என்ன தீர்வைபெற்றுத்தர போகின்றார் என்று.
23/01/2026










No comments:
Post a Comment