Tuesday, 8 July 2025

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

 இலங்கை  மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்மானமிக்க போட்டியில் வெற்றிபெற்றது இலங்கை அணி




இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் போட்டியில் 2-1அடிப்படையில் வெற்றிகொண்டது இலங்கை அணி


1-1என்ற அடிப்படையில் சமநிலையில் இருந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று 8/7/2025 கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது

  நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

   இலங்கை சார்பாக

  • பத்தும் நிசாங்க 34
  • குசல் மெண்டிஸ்-124
  • அசலங்க 54   அதிக பட்சமாக பெற இலங்கை 7விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப்பெற்றது .


  • பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பாக
  • தஸ்கின் அஹமட்,மஹ்தி ஹசன் தலா 2விக்கெட்டையும்,
  • தன்சீம்,தன்விர் இஸ்லாம்,ஹொசைன் ஆகியோர் தலா 1விக்கெட்டையும் பெற்றனர்.


 285என்ற வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 186 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது


பங்களாதேஷ் சார்பக

  •  தவ்டி ஹரிடி 58
  •  பர்வீஸ் ஹூசைன்28
  • மஹ்தி ஹசன்28 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.
  •  இலங்கை சார்பாக பந்து வீச்சில் 
  • அசித பெர்னாண்டோ,சமீரா தலா 3விக்கெட்டையும்
  •  வெல்லாலகே,ஹசரங்கா தலா2விக்கெட்டையும் கைப்பற்ற 99 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கி தொடரை கைப்பற்றியது.

டி.எம்.ஆசிக்
09/07/2025

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...