Monday, 7 July 2025

 சிலாவத்துறை பாடசாலை மாணவி பஹ்மா 
தேசிய மட்டத்தில் 3 ஆம் இடம் 




சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி F.பஹ்மா அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கான குறிக்கோள் வாசகங்களை (Motto) உருவாக்கும் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் (தமிழ் மொழிப் பிரிவு) 3 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.



பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிச் சான்றிதழ், நினைவுச் சின்னம், 25,000 ரூபா பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட பஹ்மா ஹுனைஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரோஸ்கான் - றினோசா தம்பதியரின் புதல்வியாவார்.


மாணவியின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


தகவல்:-Muhuseen Raisudeen(fb)

08/07/25

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...