Thursday, 26 June 2025

உமர் பாரூக் மகா வித்தியாலயத்துக்கு புதிய அதிபர்


புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் 41 ஆவது அதிபர்

M.U.M. SHAJAHAN (SLPS)


புளிச்சாக்குளம் 593, 

புதுக்குடியிருப்பு 

என். எம். ஹபீல் கபூரி,JP)

June, 26/2025


இவர் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் மற்றும் சிலாபம் நஸ்ரியா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.


ஏ.எம்.உமர் ஆசிரியர் மற்றும் எஸ்.ஹைரியா ஆகியோரின் புதல்வராவார்.


1998 முதல் உமர் பாரூக் பாடசாலையின் ஆசிரியராகவும், 2013 முதல் பு/தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகவும், 2016 முதல் அதே பாடசாலையின் தரம் பெற்ற அதிபராகவும் சேவையாற்றினார்.


2018 முதல் மீண்டும் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும், 2024 முதல் ஆண்டிமுனை தமிழ்  மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய அனுபத்தைக் கொண்டவராவார்.


இடைநடுவே மூன்று ஆண்டுகள் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை நிருவகிக்கும் அனுபவத்தையும் இவர் பெற்றுக் கொண்டார்.


அந்த வரிசையில் 2025.06.26 தொடக்கம் தான் ஆரம்பக் கல்வியைக் கற்ற புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.


குறித்த நியமனம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின்  பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்நியமனமாம் வழங்கப்பட்டுள்ளது


புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்து  2025/06/25ம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற அல்ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.யூ.எம். ஷரீக் அவர்களின் வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்.முகனூலில் இருந்து.


No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...