Skip to main content

காணி விடுவிக்க உத்தரவு

 வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு.


இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது. 



கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஶ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  கந்தசாமி பிரபு,  ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.




இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி  (பா.உ) கலந்துகொண்டார்.


இதன்போது, சுற்றாடல்  அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


இன்றைய கூட்டத்தின் போது நான் பல்வேறு முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தேன். அதனடிப்படையில்.


வனத்திணைக்களத்தின் 1985ம் ஆண்டு வர்த்தமானியில் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளவற்றை தவிர்த்து எமது மக்கள் பயிர் செய்கை செய்து வந்த பல ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியிருந்தது. இதனை கருத்திற்கொண்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காணிகளை விட பின்னர் வந்த வர்த்தமானிகளின் மூலம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்குமாறு நான் முன்னைய அரசாங்க காலத்தில் 2023ம் ஆண்டு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், அனைத்து பிரதேச செயலகங்களினாலும் குறித்த வர்த்தமானிக்கு மேலதிகமாக காடுகளாக காட்டப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாக அறிக்கை தயார்செய்து வழங்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் பிரகாரம் காணிகளை விடுப்பதற்கு  வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை சுற்றாடல் அமைச்சர் புதிய வர்த்தமானியினை வெளியிடுவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னரும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு நிறைவேறாமல் சென்றுள்ளது. ஆகவே இந்த அரசாங்கமாவது இக்காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளார்.


புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவை பணியகம் (GSMB) ஆனது மேல்மண் மற்றும் ஆற்றுமண் அகழ்வு பத்திரங்கள் வழங்கும் போது பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட திணைக்களங்களின்  பிரசன்னத்துடன் களவிஜயம் மேற்கொண்டு அனைத்து திணைக்களங்களின் ஒப்புதலின் பின்னர் தான் வழங்க வேண்டும் என எனவும்.


அத்துடன், மண்ணகழ்ந்து சேமித்து வைக்கப்படும் களஞ்சியசாலை (Yard) மண்ணகழ்வுதாரர்கள் காட்டினை அண்டிய பகுதியில் வைத்து இரவு வேளைகளில் மண்ணகழ்வினை மேற்கொண்டு பகல் வேளைகளில் அதனை விநியோகம் செய்கின்றார்கள். ஆகவே இதனை பிரதான வீதிகளுக்கு அருகாமையில் உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்யக்கூடியவாறு அமைத்தல் வேண்டும். அத்துடன், இவ் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தேவையான ஆளணி மற்றும் வாகன வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் எனது கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.


தகவல்:-பா உ சாணக்கியன் முகனூலில்

16/07/25

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...