Friday, 5 June 2026

அருவக்காடு திட்டத்துக்கு எதிரான பிரரேனை கொண்டு வந்த தூய தேசகட்சி


 


வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் அருவக்காடு திண்மக்கழிவு திட்டத்திற்கு எதிராக பிரேரணை


அருவக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிராக முதலாவது பிரேரணை வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த பிரேரணையை தூய தேசத்திற்கான கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சகோதரி சித்தி நவ்பரா அவர்கள் பிரதேச சபை தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.


அருவக்காடு திண்மக்கழிவு திட்டம் தொடர்பில் அப்பகுதி மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அச்சங்களை கருத்தில் கொண்டு தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்காரின் விஷேட வேண்டுகோளின் பேரில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பிரேரணை எதிர்வரும் சபை அமர்வில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அருவக்காடு திட்டத்திற்கு எதிரான உள்ளூராட்சி மன்ற மட்டத்திலான முதல் உத்தியோகபூர்வ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


தகவல் 

தூய தேசத்துக்கான கட்சி

05/06/2026

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...